Posts

SPB Death: சிகிச்சை பலனின்றி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மரணம்

Image
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சற்று முன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74. SPB Death: சிகிச்சை பலனின்றி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மரணம்      கொரோனா வைரஸ் பிரச்சனையால் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தான் விரைவில் வீடு திரும்பிவிடுவேன் என அவரே மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால் அதன் பிறகு அவரின் நிலைமை மோசமாகி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார். கவலைக்கிடமாக இருந்த அவருக்காக இசை ரசிகர்கள், பிரபலங்கள் என்று பலரும் பிரார்த்தனை செய்தார்கள்.

அதிராம்பட்டினத்தில் தாஜுல் இஸ்லாம் சங்கத் துணைத்தலைவர் ஹாஜி MMS முகமது இக்பால் (62) வஃபாத்!

Image
அதிராம்பட்டினம், மேலத்தெரு MMS குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் MMS சேக்தாவூது மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் MMS சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி MMS அப்துல் ஜப்பார்,  ஹாஜி MMS தாஜூதீன், மர்ஹூம் MMS அன்சாரி, MMS சபீர் அகமது ஆகியோரின் சகோதரரும், மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத் துணைத் தலைவருமாகிய  ஹாஜி   MMS முகமது இக்பால் (வயது 62) அவர்கள்  இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன். அன்னாரின் ஜனாஸா இன்று (25-09-2020) மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.  அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

அதிரையில் இனி வண்டி மணலை வாங்க மாட்டோம் - பில்டர்ஸ் அசோசியேஷன் அதிரடி அறிவிப்பு

Image
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், " உண்ண உணவும் உடுக்க உடையும் கிடைக்க பெற்ற ஒவ்வொரு மனிதருக்கும் நமக்காக ஒரு வீடு கட்டிக்கொள்ள  வேண்டும். அல்லது இருக்கும் வீட்டை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இயல்பானது. 1. பணமதிப்புக் இழப்பு, 2.கஜா புயல் 3.கொரோனா நோய் தொற்று ஆகிய மூன்று விபத்துக்களைக் கடந்த நான்கு ஆண்டுகளில் சந்தித்து, விலைவாசி ஏற்றத்தால் பொருளாதார முடக்கத்தில் வேலைவாய்ப்பு இல்லாமையால் ஏழை பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோருமே மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். விலைவாசி ஏற்றம் எல்லா பொருள்களுக்கும் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் கட்டிடம் கட்டத் தேவையான ஒரு வண்டி மணல் கடந்த ஆண்டு 600 ரூபாய்க்கு விற்றது. இன்று ரூபாய் 2500 வரையில் உயர்ந்திருக்கிறது.  சிமெண்ட் விலை மூட்டைக்கு 40 ரூபாய் கூடி இருக்கிறது. இந்த சூழலில் 600 ரூபாய் விற்ற மண் வண்டி ரூபாய் 1000-1100 வரை உயர்த்தி 4 மாதத்திற்கு முன் விற்கப்பட்டது. ஆனால் அதை இப்போது ரூ.2500 வரை ஏற்றம் செய்து விற்று வருகிறார்கள்.  மணல் வண்டிகாரர்கள் அரசின் புதிய நிபந்தனைகளின்படி வண்டி மணல் ஒரு நடைக்கு ரூ.105 மட்டுமே  கட்டணமாக

நமது அதிரை இளைஞர்களின் ஒரு பெரிய உதவியால் நமது ஊரின் மரியாதை திரும்பப் பெற்றுள்ளது

Image
அன்று: இன்று நமது அதிரை இளைஞர்களின் ஒரு பெரிய உதவியால் நமது ஊரின்  மரியாதை திரும்பப் பெற்றுள்ளது.

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 45 லட்சம் மதிப்பீட்டில் திரவ பிராண வாயு மையம்!

Image
செப்.20 தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு கொரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் மற்றும் தயார் நிலை  குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (20.09.2020) நேரில் ஆய்வு மேற்கொண்டார். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்கு தேவையான கூடுதல் திரவ பிராண வாயு மையம் ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதையும், 10 கிலோ லிட்டர் டேங்க் அமைக்கப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டார்.  தொடர்ந்து, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்று சிகிச்சைப் பிரிவில் கூடுதல் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளதை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார். மேலும், பார்வையாளர்கள் காத்திருப்பு அரங்கில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் அங்கு இரண்டு கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு, கூடுதல் கழிப்பறைகளை ஏற்படுத்திட அறிவுறுத்தினார். இவ்வாய்வின் போது, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர். மருதுதுரை, நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர்

குப்பைகள் CMP Lane இல் சிதறிக்கிடக்கும் அவளம்!

Image
குப்பைகள் அள்ளப்படாமல் CMP லைனில் சிதறிக் கிடக்கும் அவலம் !   குப்பைகள் அள்ளப்படாமல் CMP லைனில் சிதறிக் கிடக்கும் அவலம்! செப்:20 அலட்சியம் செய்யும் பேரூராட்சி..! சமீப காலமாக CMP லைனில் அதிகமாக குப்பைகள் தேங்கி ரோட்டில் சிதறிக் கிடைக்கும் அவலம் தொடர்கிறது. ரோட்டில் செல்வோரை முகம் சுளிக்க வைக்கின்றது. துர்நாற்றம் வீசும் அவலம். CMP லைனில் உள்ள குப்பை தொட்டிகள் எல்லாம் நிரம்பி அதனை சுற்றி கிடக்கும் அவலம்! அதிரை பேரூராட்சி ஊழியர்கள் அந்த வழியாகத்தான் செல்கிறார்கள் ஆனால்  நிரம்பி வழியும் குப்பைகளை எடுப்பது இல்லை. அதே சமயம் வீட்டில் எடுக்கும் குப்பைகளை இதே குப்பை தொட்டியில் மற்றும் அதன் அருகிலும் வைத்து விட்டு செல்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் சுகாதாரத்திற்கு சவால் விடும் வகையில் அசுதங்களாக காட்சி தருகிறது. ஆகவே கால தாமதம் செய்யாமல் குப்பைகளை சுத்தம் செய்வதற்கு பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களின் வேண்டுகோள்!

தஞ்சை வினோதகன் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு அனுமதி: ஆட்சியர் தகவல்!

Image
தஞ்சை வினோதகன் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு அனுமதி: ஆட்சியர் தகவல்! அதிரை நியூஸ்: செப்.20 தஞ்சாவூர் வினோதகன் மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்றுக்கான சிகிச்சை அளித்திட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் வினோதகன் மருத்துவமனையில் 35 படுக்கை வசதிகள் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் 15 படுக்கை வசதிகள் பிராணவாயு கருவியுடனும், 5 படுக்கை வசதிகள் வென்டிலேட்டர் கருவியுடனும், 15 படுக்கை வசதிகள் அறிகுறி இல்லாமல் கொரோனா நோய்த்தொற்று சிகிச்சை பெறுபவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று சிகிச்சை அளிக்க முன்வரும் தனியார் மருத்துவமனைகள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று சிகிச்சை அளிக்கலாம். மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் சுகாதார ஆய்வாளர்களுக்கு 50 பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா நோய்த்தொற்று குறித்து வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளும் போது, சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்களுக்கு பல்